முதல்வர் பதவி என்னை தேடி வரும்-ஜெகன் மோகன்
ஹைதராபாத்: எதிர்காலத்தில் மக்கள் ஆதரவோடு நான் முதல்வராவேன் என்று மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
ஹெலிகாப்டர் விபத்தில் ராஜசேகர ரெட்டி மரணமடைந்ததையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக முயன்று வருகிறார்.
ஆனால், அவருக்கு முதல்வர் பதவியைத் தர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்து வருகிறார். முதல்வராக்கப்பட்ட ரோசையாவுக்கு ஜெகன் மோகனும் அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர மறுத்து வருகின்றனர்.
மேலும் மோகனின் ஆதரவாளர்கள் சோனியா காந்தியின் பேனர்களை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையி்ல் இரு தினங்களுக்கு முன் டெல்லிக்கு அவரை அழைத்த சோனியா அவருக்கு கப்பல் போக்குவரத்துறை இணையமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், இதை ஜெகன் மோகன் ஏற்றுக் கொண்டுவிட்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும் அதே அவர் ஏற்கவில்லை என்றே தெரிகிறது.
இந் நிலையில் ஹைதராபாத் திரும்பிய ஜெகன் மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் தொண்டர்கள் பலர் என்னை முதல்வர் ஆக்க வேண்டும் என்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் நான் எந்த பதவியையும் விரும்பவில்லை, சாதாரண தொண்டனாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன்.
எனக்கு இப்போது 36 வயதுதான் ஆகிறது. இதனால் இப்போதே முதல்வர் பதவியை பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மக்களின் ஆதரவுடன் கட்சிக்காக கடினமாக உழைப்பேன். எதிர்காலத்தில் முதல்வர் பதவி என்னை தேடி வரும். மக்கள் ஆதரவுடன் முதல்வர் ஆகி மக்களுக்காக பாடுபடுவே்.
இப்போதைக்கு மாநில அரசியலில் இருப்பதையே விரும்புகிறேன். அதைத் தான் தலைமைக்கு எனது வேண்டுகோளாக வைத்துள்ளேன்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவுப்படி கட்சியில் பணியாற்றுவேன். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆந்திராவில் 41 தொகுதிகளில் காங்கிரசை வெற்றி பெறச் செய்து ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவேன்.
முதல்வர் ரோசையாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு. எனது தந்தை ராஜசேகர ரெட்டி ஏழைகளின் நலனில் மிகுந்த அக்கறை காட்டினார். ஏழ்மையை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி திறமையாக செயல்படுத்தினார். அவரது கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்.
விவசாயிகளுக்கு தினமும் 9 மணி நேரத்திற்கும் மேல் மின்சாரம் அளிக்க என் தந்தை முடிவு செய்திருந்தார். அவரது மின் திட்டங்களை நிறைவேற்றுமாறு முதல்வரை வலியுறுத்துவேன் என்றார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications