2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 22,000 கோடி இழப்பு!- சிபிஐ எப்ஐஆர்

முதலில் வந்தவர்களுக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில், ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மத்திய தகவல் தொடர்புத் துறை அதிகாரிகள் மிகக் குறைந்த விலையில் அலைக்கற்றைகளை ஒதுக்கி அரசுக்கு கோடி க்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியிருக்கிறர்கள்.
இப்படிச் செய்ததன் மூலம் அவர்கள் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர், தனியாருடன் சேர்ந்து சதி செய்துள்ளனர்.
அதேநேரம் தனக்கும் இந்த முறைகேட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அ ராசா.
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததை அடுத்து, டெல்லியில் உள்ள தொலைத் தொடர்புத் துறை அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக கடந்த 21ம் தேதி, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், முதல் தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தொலை தொடர்புத் துறையில் உள்ள சில அதிகாரிகளும், தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கம்பெனிகளுக்கு குறைவான கட்டணத்தில் தொலை தொடர்புத்துறை அதிகாரிகள் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அரசுக்கு 22 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அது தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது.இந்த விஷயத்தில் டிராய் விதிமுறைகளுக்கு எதிராக விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் அளவு நிர்ணயித்துள்ளனர். ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியுள்ளனர், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வேண்டியவர்கள் மட்டும் பயன்பெற வேண்டும் என்பதற்காக, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து விடாமல் இருக்க மோசடி செய்துள்ளனர். ஏல அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்காமல் விட்டிருக்கின்றனர்.
ஸ்வான் என்ற நிறுவனத்துக்கு 2 ஜி அலைக்கற்றைகளை வெறும் ரூ. 1537-க்கு விற்றுள்ளார் அமைச்சர். அந்த நிறுவனமோ, தனக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றைகளில் 45 சதவிகிதத்தை மட்டுமே ரூ.4200 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளது.
மேலும் யூனிடெக் என்ற நிறுவனம் 22 மண்டலங்களுக்கு ரூ. 1,658 கோடி செலவிட்டு உரிமங்களைப் பெற்றுள்ளது. அந்த நிறுவனமும் தன்னுடைய பங்குகளில் 60 சதவீதத்தை நார்வேயின் 'டெலினார்' என்ற நிறுவனத்துக்கு 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.
இப்படி 122 மண்டலங்களுக்கும் மிகக் குறைந்த விலை நிர்ணயித்ததால் அரசுக்கு 22000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, என இந்த எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications