எஸ்.எஸ்.சந்திரன் மீது கொலை மிரட்டல் வழக்கு
திருச்செந்தூர்: முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் கடந்த 20ம் தேதி அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அக் கட்சியின் முன்னாள் எம்பியும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரனும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சண்முகநாதனும் மிக ஆபாசமாகப் பேசினர்.
இதுகுறித்து திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் கோபால் போலீசில் புகார் தந்தார். அதில்,
எஸ்.எஸ்.சந்திரன் தமிழக முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும் மிக ஆபாசமாக விமர்சித்துப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
அதே போல் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பேசும்போது, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மிக ஆபாசமாகத் திட்டினார்.
இவர்களது பேச்சு திமுக தொண்டர்களின் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆபாசமாக பேசி, முதல்வர் குடும்பத்தினருக்கும், அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் மீது மீது ஆபாசமாக பேசுதல் (294 பி), கொலை மிரட்டல் விடுத்தல் (506 (2)) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருவரும் விரைவில் கைதாகலாம் என்று தெரிகிறது.
-
திமுக ஜாக்பாட் அறிவிப்பு! ரூ.8000 கூப்பன்.. TV, Fridge, மிக்சி, மைக்ரோவேவ் அவன்! யாருக்கு கிடைக்கும் -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி!












Click it and Unblock the Notifications