எஸ்.எஸ்.சந்திரன் மீது கொலை மிரட்டல் வழக்கு
திருச்செந்தூர்: முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் கடந்த 20ம் தேதி அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அக் கட்சியின் முன்னாள் எம்பியும் நடிகருமான எஸ்.எஸ்.சந்திரனும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சண்முகநாதனும் மிக ஆபாசமாகப் பேசினர்.
இதுகுறித்து திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் கோபால் போலீசில் புகார் தந்தார். அதில்,
எஸ்.எஸ்.சந்திரன் தமிழக முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும் மிக ஆபாசமாக விமர்சித்துப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
அதே போல் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பேசும்போது, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மிக ஆபாசமாகத் திட்டினார்.
இவர்களது பேச்சு திமுக தொண்டர்களின் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே ஆபாசமாக பேசி, முதல்வர் குடும்பத்தினருக்கும், அனிதா ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன் மீது மீது ஆபாசமாக பேசுதல் (294 பி), கொலை மிரட்டல் விடுத்தல் (506 (2)) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருவரும் விரைவில் கைதாகலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications