ரகசிய குறியீடு எண் இல்லாத செல்போன் இணைப்பு டிசம்பர் 1 முதல் துண்டிப்பு!

செல்போன்கள் திருட்டு போனால் அது யாரிடம் இருக்கிறது? என்பதைக் கண்டு பிடிக்க ஒரு சுலபமான வழி 'மொபைல் எக்விப்மெண்ட் ஐடெண்டிபைர்' (எம்.இ.ஐ.டி) எனப்படும் ரகசிய குறியீட்டு எண்கள்தான். மேலும் மொபைல் போன்களில் 'எலக்ட்ரானிக் சீரியல் நம்பர்'கள் (இ.எஸ்.என்) இருப்பதும் அவதியமாகும்.
ஆனால் சீனா, தைவான், தாயாலாந்து, கொரியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல்களில் இந்த நம்பர்கள் இருப்பதில்லை. இதனை தீவிரவாத சக்திகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதால், இத்தகைய மொபைல் கருவிகளை அடியோடு ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்து, அவற்றின் இறக்குமதிக்கு தடையும் வித்துள்ளது.
இந்த ரகசிய எண்கள் இல்லாத செல்போன்களின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்றும், தொலை தொடர்புத்துறை, இந்திய செலுலார் சங்கத்துக்கு தெரிவித்து உள்ளது.
இதன் படி ரகசிய குறியீடு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகளை, டிசம்பர் 1-ந் தேதி முதல் துண்டித்து விட, இந்திய செலுலார் சங்கம் தனது ஆதரவை தெரிவித்து உள்ளது. இதன்படி இந்தியாவில் துண்டிக்கப்படும் செல்போன்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications