பள்ளி வேன்-பஸ் மோதல்: மாணவி, டிரைவர் பலி
நெல்லை: பாளையங்கோட்டை அருகே பள்ளி வேன்-பஸ் மோதியதில் மாணவி உள்பட 2 பேர் பலியானார்கள்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ளி மாணவியர் சிலர் ஒரு வேனில் பாளை கேடிசி நகரை அடுத்த தனியார் பள்ளிக்கு வந்தனர். வேன் பாளை கேடிசி நகரில் வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் வந்தது.
பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பத்தமடையை சேர்ந்த மாணவி கற்பகவள்ளி, வேன் டிரைவர் மாரிமணி ஆகிய 2 பேர் பலியாயினர்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அரசின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. தாழையூத்து, பேட்டை, நாங்குநேரி, ஆலங்குளம் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன. போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 27 பேரை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 2 மாணவிகள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications