16000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது சென்செக்ஸ்
மும்பை: இந்த வாரம் பலத்த சரிவுடன் துவங்கிய பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி நாளான இன்று எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் 171 புள்ளிகள் வீழ்ச்சியுடனேயே முடிந்தது.
இதனால் 16000 புள்ளிகள் என்ற கவுரவமான நிலையிலிருந்து நழுவிய பங்குச் சந்தை, 15896.28 புள்ளிகளில் நிலை பெற்றது.
நிப்டியும் 39 புள்ளிகள் சரிந்து 4711.70 புள்ளிகளுடன் முடிந்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று பெரும் சரிவுக்குள்ளானது. 7 சதவிகிதம் விலைக் குறைவு ஏற்பட்டு நஷ்டத்தில் கைமாறின இந்நிறுவனப் பங்குகள். பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியான இன்று அதன் பங்குகளின் விலை 6.5 சதவிகிதம் குறைந்தது.
ரிலையன்ஸ் இன்ப்ரா, டாடா பவர், விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி போன்றவற்றின் பங்குகளும் நஷ்டத்திலேயே கைமாறின.
அதேநேரம், ஸ்டெர்லைட், கிராஸிம், ஐசிஐசிஐ வங்கி, ஏசிசி, மாருதி, டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஓரளவு லாபம் சம்பாதித்துக் கொடுத்தன.