பாஜக ஆட்சியில் இலவசமாய் தரப்பட்ட ஸ்பெக்ட்ரம்: நஷ்டம் ரூ. 1.6 லட்சம் கோடி

2 ஜி அலைவரிசை விற்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், நாட்டுக்கு ரூ. 60,000 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தான் சுதந்திர இந்தியாவின் மாபெரும் ஊழல் என்றும் பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராஜா,
பாஜக ஆட்சியில் 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு ஸ்பெக்டரத்தை இலவசமாகவே வழங்கினார்கள். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?. ரூ. 1.6 லட்சம் கோடி. காசே வாங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு ஏன் ஸ்பெக்ட்ரத்தை தந்தார்கள்?.
பாஜக ஆட்சியில் நடந்த இந்த 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தான் இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களிலேயே மகா பெரிய ஊழல்.
நாங்கள் மத்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் சொன்ன விதிப்படி தான் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டோம். எந்த விதிமுறையையும் நாங்கள் மீறவில்லை. எந்த விசாரணைக்கும் நான் தயார். இதனால் நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.
இதே அருண் ஜேட்லி தான் பாஜக ஆட்சியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக பரிந்து பேசியவர். ஒரு செல்போன் நிறுவனத்துக்காக உயர் நீதிமன்றத்திலேயே வாதாடியவர். இப்போது அரசியலுக்காக இல்லாத ஒன்றைக் கூறுகிறார்.
இப்போது அருண் ஜேட்லிக்குள்ளேயே சண்டை நடந்து கொண்டுள்ளது. அவரது அரசியல் மூளையும் அவருக்குள் உள்ள வக்கீல மூளையும் மோதிக் கொண்டுள்ளன. இதில் எந்த மூளை வெல்லுமோ தெரியாது என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications