பாஜக ஆட்சியில் இலவசமாய் தரப்பட்ட ஸ்பெக்ட்ரம்: நஷ்டம் ரூ. 1.6 லட்சம் கோடி

Subscribe to Oneindia Tamil

Tower
டெல்லி: பாஜக ஆட்சியில் செல்போன் நிறுவனங்களுக்கு இலவசமாகவே 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு அலைவரிசை இலவசமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாட்டுக்கு ரூ. 1.6 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறினார்.

2 ஜி அலைவரிசை விற்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், நாட்டுக்கு ரூ. 60,000 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தான் சுதந்திர இந்தியாவின் மாபெரும் ஊழல் என்றும் பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராஜா,

பாஜக ஆட்சியில் 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு ஸ்பெக்டரத்தை இலவசமாகவே வழங்கினார்கள். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?. ரூ. 1.6 லட்சம் கோடி. காசே வாங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு ஏன் ஸ்பெக்ட்ரத்தை தந்தார்கள்?.

பாஜக ஆட்சியில் நடந்த இந்த 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தான் இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களிலேயே மகா பெரிய ஊழல்.

நாங்கள் மத்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் சொன்ன விதிப்படி தான் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டோம். எந்த விதிமுறையையும் நாங்கள் மீறவில்லை. எந்த விசாரணைக்கும் நான் தயார். இதனால் நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.

இதே அருண் ஜேட்லி தான் பாஜக ஆட்சியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக பரிந்து பேசியவர். ஒரு செல்போன் நிறுவனத்துக்காக உயர் நீதிமன்றத்திலேயே வாதாடியவர். இப்போது அரசியலுக்காக இல்லாத ஒன்றைக் கூறுகிறார்.

இப்போது அருண் ஜேட்லிக்குள்ளேயே சண்டை நடந்து கொண்டுள்ளது. அவரது அரசியல் மூளையும் அவருக்குள் உள்ள வக்கீல மூளையும் மோதிக் கொண்டுள்ளன. இதில் எந்த மூளை வெல்லுமோ தெரியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+