For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 பள்ளி சிறுவர்-சிறுமியரை வெட்டிய சட்ட மாணவர்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அருகே பள்ளி மாணவ-மாணவிகள் 9 பேரை சட்டக் கல்லூரி மாணவர் வழிமறித்து அரிவாளால் வெட்டினார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள நகரி பகுதியை சேர்ந்த முனியாண்டியின் மகன் விஜய பிரதீப், சென்னை சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவருடைய அக்கா மகன் சுமன், நகரியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறார். சில நாட்களுக்கு முன் சுமனை அவருடன் படிக்கும் சில மாணவர்கள் தாக்கினர்.

இது குறித்து சுமன் தனது மாமா விஜய பிரதீப்பிடம் கூறவே ஆத்திரமடைந்த அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பிய புவனேஸ்வரி (9), மாரீஸ்வரி (11), வினிதா (11), விவேக் (12), மணிராஜ் (9), தினேஷ்குமார் (9), தியாகு (9), குமார் (9) உள்பட 9 பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

இதில் படுகாயடைந்த 9 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போகிறபோக்கி அங்கிருந்த மலைச்சாமி என்பவரின் டீக் கடையையும், வீட்டையும் விஜய பிரதீப் தாக்கி சூறையாடினார்.

இதையடுத்து விஜய பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X