லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது
Subscribe to Oneindia Tamil
மணப்பாறை: விபத்தில் சிக்கிய லாரி டிரைவருக்கு ஜாமீன் வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ கைது செய்யப்பட்டார்.
மணப்பாறையில் கடந்த 16ம் தேதி மின்வாரிய ஊழியர் கிருஷ்ணன், லாரி டிரைவர் ஆறுமுகம் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டன. இதில் கிருஷ்ணன் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து தொடர்பாக ஆறுமுகம் மீது வழக்கு போடப்பட்டது. அவரை ஜாமீனில் விட மணப்பாறை சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தி ரூ.1,500 லஞ்சம் கேட்டார்.
இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஆறுமுகம் புகார் செய்தார். இதையடுத்து இன்று ரூ.1500யை ஆறுமுகம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தியிடம் கொடுத்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications