நதிகள் இணைப்பால் சூழலுக்கு பேராபத்து-பிரதமர்
டெல்லி: நதி நீர் இணைப்பால் விவசாயம் பெரும் பலனை அடையும். அதே வேளையில், சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை சந்திக்கும், நிவர்த்தி செய்ய முடியாத இழப்பை அது சந்திக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்து வரும் இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் கலந்து கொண்டு சிங் பேசுகையில், நதி நீர் இணைப்பு குறித்து அவசரப்படக் கூடாது. இதுகுறித்து நிபுணர்களின் கருத்துகளை அறிய வேண்டும். இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் செயல்பட வேண்டியது அவசியம்.
அதற்காக நதி நீர் இணைப்புத் திட்டங்களை நான் ஒரேயடியாக நிராகரித்து விடவில்லை. இந்த திட்டங்களால், விவசாய நிலங்கள் விரிவடையும்.
உலக வெப்பமயமாக்கல் குறித்து அனைவரும் தீவிரமாக கவலைப்பட வேண்டும். அதற்கு எதிராக போராட வேண்டும். இந்திய மக்கள் பொறுப்பு வாய்ந்த உலக மக்களாக செயல்பட வேண்டும். அதேசமயம், பணக்கார நாடுகள் வளரும் நாடுகளை பாதிக்காத வகையில் செயல்பட முன்வர வேண்டும்.
நதிகளை இணைப்பது தொடர்பான இரண்டு மற்றும் மூன்று திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. திட்ட வடிவம் தற்போது தயாராக உள்ளது. கென் - பெட்வா பகுதியும் நதி நீர் இணைப்புக்கு உள்படுத்தப்படும் பகுதியாகும். இங்கு சோதனை அடிப்படையில் நதி நீர் இணைப்பு மேற்கொள்ளப்படும்.
பெட்வா நதி நீர் இணைப்பு மூலம் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஏறக்குறைய தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் மிகுந்த எச்சரிக்கையோடு இதைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல், வனப் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். அவசர கதியில் மேற்கொண்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாக அமைந்துவிடலாம் என்றார்.
சமீபத்தில் ராகுல் காந்தியும், நதி நீர் இணைப்புத் திட்டத்தால் பேராபத்து ஏற்படும் என்றார். சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும், இது சாத்தியப்படாத திட்டம், செலவு பிடிக்கும் திட்டம் என்று கூறியிருந்தார். தற்போது பிரதமரும் இந்தத் திட்டத்தால் பாதிப்புகள் அதிகம் என்கிறார். எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நதி நீர் இணைப்புக்கு எதிராக உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications