நதிகள் இணைப்பால் சூழலுக்கு பேராபத்து-பிரதமர்
டெல்லி: நதி நீர் இணைப்பால் விவசாயம் பெரும் பலனை அடையும். அதே வேளையில், சுற்றுச்சூழல் பெரும் பாதிப்பை சந்திக்கும், நிவர்த்தி செய்ய முடியாத இழப்பை அது சந்திக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் நடந்து வரும் இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் கலந்து கொண்டு சிங் பேசுகையில், நதி நீர் இணைப்பு குறித்து அவசரப்படக் கூடாது. இதுகுறித்து நிபுணர்களின் கருத்துகளை அறிய வேண்டும். இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் செயல்பட வேண்டியது அவசியம்.
அதற்காக நதி நீர் இணைப்புத் திட்டங்களை நான் ஒரேயடியாக நிராகரித்து விடவில்லை. இந்த திட்டங்களால், விவசாய நிலங்கள் விரிவடையும்.
உலக வெப்பமயமாக்கல் குறித்து அனைவரும் தீவிரமாக கவலைப்பட வேண்டும். அதற்கு எதிராக போராட வேண்டும். இந்திய மக்கள் பொறுப்பு வாய்ந்த உலக மக்களாக செயல்பட வேண்டும். அதேசமயம், பணக்கார நாடுகள் வளரும் நாடுகளை பாதிக்காத வகையில் செயல்பட முன்வர வேண்டும்.
நதிகளை இணைப்பது தொடர்பான இரண்டு மற்றும் மூன்று திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. திட்ட வடிவம் தற்போது தயாராக உள்ளது. கென் - பெட்வா பகுதியும் நதி நீர் இணைப்புக்கு உள்படுத்தப்படும் பகுதியாகும். இங்கு சோதனை அடிப்படையில் நதி நீர் இணைப்பு மேற்கொள்ளப்படும்.
பெட்வா நதி நீர் இணைப்பு மூலம் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஏறக்குறைய தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் மிகுந்த எச்சரிக்கையோடு இதைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல், வனப் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். அவசர கதியில் மேற்கொண்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாக அமைந்துவிடலாம் என்றார்.
சமீபத்தில் ராகுல் காந்தியும், நதி நீர் இணைப்புத் திட்டத்தால் பேராபத்து ஏற்படும் என்றார். சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும், இது சாத்தியப்படாத திட்டம், செலவு பிடிக்கும் திட்டம் என்று கூறியிருந்தார். தற்போது பிரதமரும் இந்தத் திட்டத்தால் பாதிப்புகள் அதிகம் என்கிறார். எனவே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நதி நீர் இணைப்புக்கு எதிராக உள்ளதாக கருத்து எழுந்துள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications