உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிப் பரிந்துரை - பி.டி.தினகரன் பெயர் நீக்கம்

பெருமளவில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகவும், சொத்து வாங்கியதில் விதி மீறலில் ஈடுபட்டதாகவும் சரமாரியாக புகார்கள் எழுந்ததால், அவரது பெயரை உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிக்கு பரி்நதுரை செய்யும் முடிவை காலேஜியம் நிறுத்தி வைத்திருந்தது. தற்போது தினகரனின் பெயர் நீக்கப்பட்டு விட்டது.
தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கக் கூடாது என்று கூறி ஐந்து பிரபல சட்ட நிபுணர்கள், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து தினகரனின் பெயர் நீக்கப்பட்டு விட்டது. அதேசமயம், மத்தியப் பிரதேச தலைமை நீதிபதி பட்நாயக், பஞ்சாப்-ஹரியாணா தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர், கல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எஸ். நிஜ்ஜார், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் நீதிபதிப் பதவிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications