பொதுப்பணித்துறை 2 ஆக பிரிக்கப்படுகிறது- அமைச்சரவையில் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித்துறை 2 ஆக பிரிக்கப்படவுள்ளது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை 39வது அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. முதல்வர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறையை இரண்டாகப் பிரித்து, பொதுப்பணிகள்-கட்டிடம் மற்றும் பொதுப்பணிகள்-நீர்ப்பாசனம் என்றும் பிரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டது.
இதுதவிர உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, சட்டசபை கூட்டத் தொடர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications