சங்கிலியால் நெரித்து பெண் கொலை-கணவன் கைது
நெல்லை: நடத்தையில் சந்தேகப்பட்டு திருமணமாகி இருவராங்களே ஆன புதுப்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
கூந்தகுளத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் ராமர். ஓட்டல் தொழிலாளி. இவருக்கும் அருமநேரியை சேர்ந்த வேல் ஆறுமுகம் மகள் தங்கலெட்சுமிக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு புதுமண தம்பதிகள் பாளை கேடிசி நகரில் உள்ள ராமரின் அக்காள் மீனாட்சி வீட்டுக்கு விருந்துக்கு வந்தனர்.
அங்கு மீனாட்சியின் கணவரிடம் தங்கலெட்சுமி சிரித்து சிரித்து பேசியதால் ராமர் சந்தேகம் அடைந்தார். மேலும் தங்கலெட்சுமி செல்போனில் உறவினர்களிடம் பேசியதையும் சந்தேகப்பட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலிக்கு செல்வதாக கூறிவிட்டு சிறிது நேரத்தில் ராமர் வீட்டுக்கு வந்துள்ளார். தன் மேல் சந்தேகப்பட்டு அவ்வாறு வந்ததாக தங்கலெட்சுமி சத்தம் போட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ராமர், நாய் கட்டும் இரும்பு சங்கிலியால் தங்கலெட்சுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து ராமரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications