கருவின் பாலின சோதனை-2 டாக்டர்களுக்கு சிறை
மும்பை: சட்டத்திற்குப் புறம்பாக, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய சோதனை நடத்திய இரண்டு டாக்டர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதை அறிய அரசு தடை விதித்துள்ளது. இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது.
பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், மும்பை தாதர் நகரில் ஸ்ரீ மெட்டர்னிட்டி நர்சிங் ஹோம் வைத்துள்ள டாக்டர் சுபாங்கி அத்கர் (62), ஹோமியோபதி டாக்டரான சாயா தாதேத் (42) ஆகியோர், கருகவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறியும் சோதனை நடத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.
இவர்கள் மீது பிரசவத்திற்கு முன்பே பாலினச் சோதனை செய்யத் தடை விதிக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இச்சட்டத்தின் நான்கு பிரிவுகளின் கீழ் இவர்கள் தடையை மீறியதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜாம்ப்கர், இச்சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையான 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 10,000 அபராதம் (இதுதான் அதிகபட்ச அபராதம்) ஆகியவற்றை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தார்.
இந்த இரு டாக்டர்களும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் நாளிதழ்களில் ஒரு விளம்பரம் அளித்தனர். அதில், ஆண் குழந்தை வேண்டுவோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுதலையாகியிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications