அகமதாபாத்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது
Subscribe to Oneindia Tamil
மும்பை: அகமதாபாத்தில் இருந்து பெங்களூர் சென்று கொண்டிருந்த காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை அருகே இன்று காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
மும்பை அருகே தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டியை நோக்கி வரும் போது, தொம்பிவலி என்ற இடத்தில் ரயில் தடம் புரண்டது. 4 பெட்டிகள் சேதமடைந்தன.
உயிரிழப்பு ஏதும் இல்லை. விபத்து நடந்தவுடன் உடனடியாக, சம்பவ இடத்துக்கு மாற்று ரயில் அனுப்பப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்ற பயணிகள் மாற்று ரயில் மூலம் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டதாக சென்ட்ரல் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications