புலிகளுக்கு ஆயுத சப்ளை: சிங்கப்பூர் அரசியல் தலைவர் பால்ராஜ் நாயுடு கைது

சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் நாயுடு. கட்சியின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரை சிங்கப்பூர் போலீஸார் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்ததாக கூறி கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் தனது வீட்டில்வைத்து நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 29ம் தேதி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
நாயுடு மீது அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளுக்காக அவர் தேடப்பட்டு வருகிறார். எனவே நாயுடுவை அமெரிக்க போலீஸார் விசாரணைக்காக அமெரிக்காவுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
அவரை அமெரிக்காவுக்கு அனுப்பும் கோரிக்கை தொடர்பான மனு நாளை சிங்கப்பூர் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
நாயுடு மீது அமெரிக்காவில் உள்ள வழக்கு..
சீர்திருத்தக் கட்சியை நிறுவியர்களில் ஒருவர் நாயுடு. இவரும், இன்னொரு சிங்கப்பூர் வாசியான ஹனீபா உஸ்மான் என்பவரும் சேர்ந்து விடுதலைப் புலிகளுக்காக அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை சப்ளை செய்துள்ளதே குற்றச்சாட்டாகும்.
இந்த வழக்கில் ஏற்கனவே உஸ்மான் கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
57 வயதாகும் உஸ்மான், ஒரு ஆண்டுக்கு முன்பு பால்டிமோர் கோர்ட்டில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 37 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.
கட்நத 2006ம் ஆண்டு பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை புலிகளுக்கும், ஆயுத வியாபாரிகளுக்கும் இடையே புரோக்கராக செயல்பட்டுள்ளார் நாயுடு என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது நாயுடுவை அமெரிக்காவுக்கு விசாரணைக்காக சிங்கப்பூர் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. அங்கு விசாரணையை சட்டப்பூர்வமாக தனது கட்சிக்காரர் சந்திப்பார் என்று நாயுடுவின் வழக்கறிஞரான ஜோனதன் டேன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பால்ராஜ் நாயுடு தீவிரவாதி அல்ல. இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்கு கட்சி துணை நிற்கும் என்று சீர்திருத்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications