கனமழை - காய்கறி வரத்து குறைந்தது - விலை உயர்வு
Subscribe to Oneindia Tamil

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 500 லாரிகளில் காய்கறி வருவது வழக்கம். ஆனால், தற்போது பலத்த மழை காரணமாக காய்கறி லாரிகளின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. வருகிற லாரிகளும் குறித்த நேரத்துக்கு வந்து சேருவதில்லை.
சென்னை நகரில் அதிக மழை பெய்வதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கூட்டமும் இன்று குறைவாகவே காணப்பட்டது.
மார்க்கெட்டில் வெங்காயம், தக்காளி விலை இன்று அதிகமாக இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ. 18க்கு விற்கிறது. கேரட் விலை ரூ. 28 ஆக இருந்தது. காலிபிளவர் 10, பீட்ரூட் 12, நூக்கல் 12, உருளைக்கிழங்கு 20, பச்சைப் பட்டாணி ரூ. 100 என கிடுகிடு விலை உயர்வு காணப்படுகிறது.
மழை நின்று காய்கறி வரத்து அதிகரித்தால்தான் விலை உயர்வு குறையும் என காய்கறி வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications