தொடர் மழையால் அவதி - ரயில்கள், விமானங்கள் தாமதம்
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக சென்னைக்கு வந்த தென் மாவட்ட ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தன. அதேபோல விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெய்த கன மழையால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த அனைத்து ரயில்களும் தாமதமாக வந்து சேர்ந்தன.
தண்டவாளங்களில் அதிக நீர் தேங்கி நின்றது, சிக்னல் பிரச்சினை, மெதுவான வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டது என இதற்குக் காரணம் கூறப்பட்டது.
அனந்தபுரி, முத்து நகர், பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை உள்பட அனைத்து ரெயில்களும் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.
காலை 6.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைய வேண்டிய கன்னியாகுமரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10.30 மணிக்கு எழும்பூரை வந்து சேர்ந்தது.
20 விமானங்கள் தாமதம்...
இதேபோல, சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையிலும் தண்ணீர் தேங்கி நின்றதாலும், விமான நிலைய விரிவாக்கப் பணி நடப்பதாலும் விமான நிலையத்தில் தேங்கிய நீர் வெளியேற முடியவில்லை.
இதனால் மதுரை, திருவனந்தபுரம், மும்பை போன்ற நகரங்களுக்கான உள்நாட்டு சேவைகள் சுமார் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications