திருப்பதியில் தொடர் மழை - பக்தர்கள் கூட்டம் குறைந்தது
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதியில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
கன மழையுடன், கடும் குளிரும் நிலவுவதால், கோவிலில் கூட்டம் வெகுவாக குறைந்தது. இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திலேயே சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் மொட்டை போடும் இடம், அன்ன தான காம்ப்ளக்ஸ் கட்டிடம் போன்றவையும் வெறிச் சோடி கிடக்கிறது.
திருப்பதி மலையில் உள்ள குமாரதாரா பகபுதாரா, பாபவிநாசனம் ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த அணைகள் ஓரளவு நிரம்பினால் திருமலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
அடைமழை காரணமாக திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள கபிலதீர்த்தம் அருவியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது.












Click it and Unblock the Notifications