For Daily Alerts
Just In
ரன்வேயில் சறுக்கிய கிங்பிஷர் விமானம் - பயணிகள் பத்திரம்
மும்பை: பவநகரிலிருந்து மும்பை வந்த கிங்பிஷர் விமானம் தரையிறங்கியபோது சறுக்கியது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.
மும்பை விமான நிலைய ரன்வே புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரன்வே பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி செவ்வாய்க்கிழமைகளில், 6 மணி நேரத்திற்கு, ரன்வேயில் பாதிப் பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அந்த ரன்வேயில்தான் விமானங்கள் கிளம்புவதும், இறங்குவதும் நடைபெறும்.
இந்த நிலையில் இன்று பவநகரிலிருந்து வந்த கிங்பிஷர் விமானம் தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக சறுக்கியது. இருப்பினும் விமானி மிகவும் சாதுரியமாக விமானத்தை மீண்டும் ரன்வேக்குத் திருப்பி விட்டார்.
பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, November 11, 2009, 16:01 [IST]