போர்வெல் குழியில் விழுந்த சிறுவன்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அருகே ஜெகதபுரா என்ற இடத்தில் 150 அடி ஆழ ஆழ்குழாய் கிணற்றில் 4 வயது சிறுவன் விழுந்து விட்டான். 2 நாட்களாகி விட்ட நிலையில் அவனை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது அந்த சிறுவன் மயக்க நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது.
அச்சிறுவனின் பெயர் ஷாஹில். திங்கள்கிழமை காலை தனது வீட்டுக்கு அருகே அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழ் குழாய் கிணற்றில் விழுந்து விட்டான்.
அவனை மீட்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது சிறுவன் மயக்க நிலைக்குப் போயுள்ளான். அவனிடமிருந்து எந்தவித பதிலும் தற்போது வரவில்லை.
தொடர்ந்து கிணற்றுக்குள் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த ஆழ் குழாய் கிணறுக்கு அருகே பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதுவரை 60 அடி வரை மட்டுமே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications