ஆஸி- மேலும் ஒரு இந்தியர் தாக்கப்பட்டார்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயர் சாய் ரத்தன் திவாரி. 22 வயதாகும் இவர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர். மெல்போர்னில் உள்ள பல்லாரத் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
மெல்போர்ன் நகரில் இவர் தனது நண்பருடன் ஒரு கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது 2 ஆஸ்திரேலியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இந்த இடத்தில் உங்களுக்கு அனுமதி கிடையாது, இடம் கிடையாது என்று கூறி திவாரியைத் தாக்கி விட்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications