சீன மிரட்டல்-தலாய் லாமாவுக்கு இந்தியா திடீர் கட்டுப்பாடு

1962ம் ஆண்டு போரில் இந்தியாவுக்கு பலத்த அடி தந்ததை நினாவூட்டி சீனா விடுத்த மிரட்டலையடுத்தே மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மதத் தலைவர்களின் சுற்றுப் பயணத்தில் எல்லாம் நாங்கள் தலையிடுவதில்லை என்று நேற்று கூறிய மத்திய அரசு இப்போது தலாய் லாமாவுக்கு மாநில அரசு மூலமாக இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தவாங் நகரில் அவர் நடத்த இருந்த பொதுக் கூட்டத்தை மதச் சொற்பொழிவுக் கூட்டமாக மாற்றுமாறு தலாய் லாமாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் அருணாசலப் பிரதேசத்துக்கு தலாய் லாமாவுடன் வந்துள்ள நிருபர்களுக்கும் புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்திற்கு வரும் வெளி நபர்கள் inner line permit (ILP) என்ற அனுமதியைப் பெற வேண்டும்.
நிருபர்களுக்கு இந்த அனுமதியை 2 நாட்களுக்கு மட்டுமே வழங்கியுள்ள மாநில அரசு, அதை நீட்டிக்க மறுத்துவிட்டது. இதனால் நிருபர்கள் அங்கிருந்து வெளியே வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தவாங் பகுதியில் உள்ள ஒரு புத்த மத மையத்துக்குச் செல்லவும் தலாய் லாமாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் பயணித்து வரும் இந்திய-திபெத் நட்புறவுக் கழகத்தினருக்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
இவர்கள் திபெத்திய கொடியுடன் கூடிய டி-சர்ட்கள் அணிந்து தலாய் லாமாவுடன் பயணித்து வந்தனர். இந் நிலையில் இவர்கள் லாமாவுடன் செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications