அத்வானிக்கு எதிராக 80 வயது முதியவர் நூதன வழக்கு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு எதிராக 80 வயதான கே.டி.பாண்டியா என்ற முதியவர் குஜராத் உர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

பாண்டியா தாக்கல் செய்த மனுவில், பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி முதலில் தனது தொகுதி நலனில் (காந்திநகர்) அக்கறை செலுத்த வேண்டும். அந்தத் தொகுதிக்கு அவர் விசுவாசமாக இருக்க வேண்டும். அதன் பின்னர்தான் தனது கட்சிக்கு அவர் விசுவாசமாக இருக்க முயற்சிக்க வேண்டும்.

இந்த விஷத்தில் சுவிட்சர்லாந்தில் உள்ளதைப் போன்ற நடைமுறையை நமது நாட்டிலும் கொண்டு வர வேண்டும். ஆனால் நமது நாட்டில் தங்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களை கொஞ்சம் கூட அரசியல் வாதிகள் மதிப்பதில்லை. வாக்காளர்களை கேட்காமலேயே முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள். முக்கிய முடிவுகளில் மக்களின் பங்களிப்பு என்பது எதுவுமே இல்லாத அவல நிலை காணப்படுகிறது.

காந்தி நகரில் வாக்காளர்களை உள்ளடக்கிய அமைப்பை உருவாக்க வேண்டும். காந்தி நகர் தொகுதி மக்களின் பிரச்சினைகளை இந்த அமைப்பு எம்.பியிடம் கொண்டு சென்று தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இதற்கு கோர்ட் உத்தரவிட வேண்டும்.

எந்த முக்கிய கொள்கை முடிவை எந்த எம்.பியாவது எடுக்க முயற்சித்தால் முதலில் வாக்காளர்களிடம் அதுகுறித்து கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் பாண்டியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+