Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் மியான்மர் சர்வாதிகாரி-ராஜ வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

கண்டி: மியான்மரில் ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டு ராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் சர்வாதிகாரி ஜெனரல் தான் ஷ்வே இலங்கை வந்துள்ளார். அவருக்கு அங்கு 21 துப்பாக்கிகள் முழங்க ராஜ வரவேற்பு அளிக்கப்பட்டது.

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ளார் தான் ஷ்வே. நேற்று கொழும்பு வந்த அவருக்கு அதிபர் ராஜபக்சே வரவேற்பு அளித்தார்.

பின்னர் தான் ஷ்வேவுக்கு கண்டியில், சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா வரவேற்றார். பின்னர் தான் ஷ்வே கூறுகையில், இங்கு எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகவும் வியப்பாகவும், திரில்லாகவும் உள்ளது.

இரு நாடுகம் மிக நெருங்கிய புத்தமத உறவுகளுடைய வரலாற்றைக் கொண்டவையாகும்.

எனது இலங்கை பயணத்தின்போது புத்தமத புனிதத் தலங்களுக்குச் செல்ல முன்னுரிமை கொடுக்கப் போகிறேன் என்றார்.

தான் ஷ்வே இலங்கை வருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் 26 பேர் கொண்ட குழு ஒன்றும் உடன் வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இக்குழு மியான்மர் திரும்புகிறது.

கண்டியில் உள்ள டீலக்ஸ் ஹோட்டலில் மிக பலத்த பாதுகாப்பு மத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளார் தான் ஷ்வே. அவருடன் பொகல்லகாமா பேச்சு நடத்தினார்.

மியான்மரும், இலங்கையும், புத்தமதத்தின் ஒரு பிரிவான தெரவாடா புத்தமதத்தை பின்பற்றும் நாடுகள் ஆகும்.

இதற்கிடையே, மியான்மருடன் இலங்கை நெருக்கமான உறவுகளை வைத்துக் கொள்வது இலங்கையை சர்வதேச சமூகத்திடமிருந்து மேலும் விலகச் செய்து விடும் என இலங்கையில் வாழும் மியான்மர் புத்த பிக்குகள் இலங்கை அரசை எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் ஷ்வேவுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ள விரும்பும் ராஜபக்சே ஒரு முட்டாள் என்று காட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மியான்மர் சர்வாதிகாரியை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் எண்ணம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மியான்மர் புத்த பிக்குளின் செய்தித் தொடர்பாளரான நியானசிறி என்பவர் கூறுகையில், நாங்கள் தான் ஷ்வேவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் இலங்கை அரசு எங்களை படையினரை வைத்து ஒடுக்கி விடும் என்றார்.

தான் ஷ்வே இரண்டு நாட்களுக்கு கண்டியில் தங்கியிருப்பாராம். பின்னர் அனுராதபுராவுக்கும், வேறு சில புத்த மத தலங்களுக்கும் செல்லவுள்ளாராம்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள புத்த விகாரைக்குச் செல்லும் அவர் அங்கு புத்த பிக்குகளிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அன்றே நாடு திரும்புகிறார்.

கடந்த ஜூன் மாதம் ராஜபக்சே மியான்மருக்கு விசிட் அடித்தார். இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு உதவிகள் செய்ததற்காக அப்போது தான் ஷ்வேவுக்கு நன்றி கூறி விட்டு வந்தார்.

தமிழர்களுக்கு எதிரான போரின்போது மியான்மரும் தன்னால் 'முடிந்த பல உதவிகளை' இலங்கைக்கு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்- தெ.ஆ. அமைச்சர்:

இதற்கிடையே, கொழும்பு வந்த தென் ஆப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் மைதே நகோனா மாஷாபெனே, இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள புலிகள் ஆதரவாளர்க், இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் கெட்ட பெயரை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

இலங்கை குறித்து தவறான பிரசாரத்தை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அதிபரிடமும், தென் ஆப்பிரிக்க தமிழர்களிடமும் விளக்கிக் கூறுவேன். அவர்களது மனதை மாற்ற முயற்சிப்பேன்.

இலங்கைக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்ய தென் ஆப்பிரிக்கா தயாராக உள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+