நேரு பிறந்த நாள்-தலைவர்கள் அஞ்சலி
டெல்லி: நாட்டின் முதல் பிரதமரும், குழந்தைகளால் நேரு மாமா என அன்போடு அழைக்கப்படுபவருமான ஜவஹர்லால் நேருவின் 121வது பிறந்த நாள் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேரு நினைவிடமான சாந்திவனத்தில் இவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல தமிழகத்தில் சென்னையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நேரு சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்றைய தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.