வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 6 லட்சம் மோசடி- நெல்லை கைது
நெல்லை: நெல்லையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான வாலிபர் 3 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பாளை தியாகராஜா நகரை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். கடந்த 2006ம் ஆண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மேலப்பாளையம் தொம்மைமிக்கெல் புரத்தை சேர்ந்த ஜான்சன் உள்ளிட்டோரிடம் 6 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். பின்னர் அப்துல் ரகுமான் வழக்கு விசாரணை நெல்லை ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜாராகாமல் மாயமானார்.
கோர்டில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் மாணிக்கராவ், உத்தரவுபடி உதவி கமிஷனர் சேவியர் ஆலோசனை படி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜோன்ஸ் கொண்ட தனிப்படையினர் மாயமான அப்துல் ரகுமானை தேடி வந்தனர்.
3 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் பதுங்கியிருந்த அப்துல் ரகுமனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அப்துல் ரகுமான் நெல்லை ஜேஎம் 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.