For Daily Alerts
Just In
பொன்சேகா சம்பந்தியின் பதவி பறிப்பு
கொழும்பு: இலங்கை கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து பொன்சேகா விலகியுள்ள நிலையில் அவரது உறவினர்களின் பதவிகள் மீது ராஜபக்சே அரசு கை வைத்துள்ளது.
பொன்சேகாவின் சம்பந்தியான சிசில் பெரேரா காவல்துறையில் உயர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது அவர் அப்பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டார்.
இதேபோல மைத்துனர் சரத் முனசிங்கே அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவில் உயர் பதவியில் இருந்து வந்தார். அவரைத் தூக்கி போக்குவரத்து போலீஸுக்கு மாற்றி விட்டனர்.
பாதுகாப்புத்துறைச் செயலாளரும், ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபயாவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Comments
dismissed இலங்கை sri lanka posts பதவிகள் relatives உறவினர்கள் பறிப்பு transfer இடமாற்றம் fonseka பொன்சேகா
Story first published: Saturday, November 14, 2009, 10:37 [IST]