கருணாநிதி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்- சுப்பிரமனிய சாமி
Subscribe to Oneindia Tamil
புதுடில்லி: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக மக்களிடம் முதல்வர் கருணாநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமனியசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், 'முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார் கருணாநிதி. இப்பிரச்னையில் தமிழக மக்களை கைவிட்டுவிட்ட அவர் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். அவர் தன் முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்யவேண்டும்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மதகுகளை மூடுங்கள் என்று கருணாநிதியிடம் நான் அப்போதே கூறினேன். ஆனால் என் பேச்சை அவர் கேட்கவில்லை' என்று சுப்பிரமனியசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications