போலி தங்கக்காசு விற்ற பெண்கள் கைது
நெல்லை: தமிழகம் முழுவது்ம் தங்க முலாம் பூசப்பட்ட போலி தங்கக்காசுகளை கொடுத்து மக்களை ஏமாற்றிய 8 பெண்கள், உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்களை ஏமாற்றி போலி தங்கக்காசுகளை ஒரு கும்பல் விற்பனை செய்வதாக போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
போலி தங்க காசு மோசடியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நெல்லை சரக டிஐஜி, கண்ணப்பன் உத்தரவின் பேரில், எஸ்பி ஆஸ்ரா கார்க் மேற்பார்வையில் தென்காசி இன்ஸ்பெக்டர் நாகராஜன், சுரணடை இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சீனிவாசன், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடசத்தினர்.
இந்நிலையில் போலி தங்கக்காசு மூலம் தமிழகம் முழுவதும் பலரை ஏமாற்றிய கொண்டலாம்பட்டியை சேர்ந்த 8 பெண்கள் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும போலி தங்கக்காசு விற்ற பணத்தில் பைக், நகைகள், வீடுகள் வாங்கியிருப்பது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications