கேரள வாகனங்களை மறிப்போம்: மதிமுக
மதுரை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு உணவுப் பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்த வரும் டிசம்பர் 29ம் தேதி கம்பத்தில் மதிமுக மறியல் போராட்டம் நடத்த உள்ளது. முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சியை கேரள அரசு கைவிடக்கோரி இப்போராட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: பக்கத்திலேயே புதிய அணை கட்டுவதன் மூலம், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு மறைமுகமாக திட்டமிட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை மதிக்காமல் கேரள முதல்வர், அமைச்சர்கள் புதிய அணை, புதிய ஒப்பந்தம் என பேசி வருகின்றனர்.
புதிய அணை கட்டி இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். கேரள அரசின் அக்கிரமத்தை தடுத்து நிறுத்தும் வகையில் டிசம்பர் 29ம் தேதி, தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்களை மறிப்போம்.
மத்திய அரசு அனுமதி மறுத்தாலும், கேரள அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது.
தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் அங்கு புதிய அணையை கட்ட விடமாட்டோம். இதை அனுமதித்தால் சோவியத் யூனியன் துண்டு துண்டாக உடைந்தது போன்ற நிலை இந்தியாவிற்கும் ஏற்படும். இது எங்கள் காலத்தில் நடக்காவிட்டாலும், எங்கள் பிள்ளைகள் காலத்தில் நடக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications