திருச்சி-சிங்கப்பூர் விமானத்தில் புகை: சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது

Subscribe to Oneindia Tamil

Air India express
சென்னை: திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தின் வால் பகுதியில் எண்ணெய் கசிவால் புகை கிளம்பியதால் அந்த விமானம் சென்னையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த 189 பேரும் உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 12 மணிக்கு புறப்பட்டது. அதில் 182 பயணிகளும் பைலட்டுகள் உள்பட 7 ஊழியர்களும் இருந்தனர்.

விமானம் பறக்க ஆரம்பித்தவுடன் அதன் வால் பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதையடுத்து விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்க்கப்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

பொறியாளர்கள் அந்த விமானத்தில் சோதனை நடத்தியபோது எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த விமானத்தை இயக்க இயலாது என்று தெரிவித்துவிட்டதால் வேறு ஒரு விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எண்ணெய் கசிவைத் தொடர்ந்து அந்த விமானத்தில் தீ பிடிக்காதது பெரும் அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+