சச்சினை ஆதரித்து பேசிய நடிகர் வீடு மீது தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை இந்தியர் அனைவருக்கும் சொந்தம் என்று கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கரை கண்டித்த பால் தாக்கரேவுக்கு எதிராக கருத்து சொன்ன நடிகரின் வீடு மீது சிவசேனா தொண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தியர் அனைவருக்கும் மும்பை சொந்தம் என்று கூறியதற்கு சச்சின் தெண்டுல்கருக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்தி-போஜ்புரி மொழி நடிகரும், பாடகருமான மனோஜ் திவாரி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள் மும்பை மகதாவில் உள்ள மனோஜ் திவாரி வீடு மீது தாக்குதல் நடத்தினர்.

நேற்று இரவு 9 மணியளவில் 20க்கும் மேற்பட்ட கும்பல் அவரது வீடு மீது சரமாரி கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது வீடு பெரும் சேதமடைந்தது.

மனோஜ் திவாரி உடனே மும்பையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்தக் கும்பல் ஆவேச கோஷமிட்டது.

தாக்குதல் நடந்த போது மனோஜ்திவாரி வீட்டில் இல்லை. இது தொடர்பாக அவருடைய உதவியாளர் சசிகாந்த் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார். வழக்கம்போல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

பால் தாக்கரே வசம் இருந்த மராட்டிய ஓட்டுக்களை ராஜ் தாக்கரே தனது அடாவடி அரசியல்மூலம் அபகரிக்க ஆரம்பித்துவிட்டதால் பால் தாக்கரேவுக்கு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர அரசியல்ரீதியில் பிழைப்பு நடத்த வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+