இடைத் தேர்தல்-கலெக்டர்களுடன் குப்தா ஆலோசனை
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்கள் குறித்து தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
திருச்செந்தூர் சட்டசபை தொகுதியின் அதிமுக உறுப்பினராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன் தனது எம்எஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேர்ந்தார். வந்தவாசி தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.பி.ஜெயராமன் சமீபத்தில் மரணம் அடைந்தார்.
இதனால் அந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. ஜனவரி மாதத்துக்குள் நடக்கவுள்ள இந்த இடைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக நரேஷ் குப்தா, இரு மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தொகுதி வாக்காளர் பட்டியலை வரும் 20ம் தேதிக்குள் வெளியிட நரேஷ் குப்தா உத்தரவிட்டார்.
தேர்தல் அலுவலர்களாக மத்திய அரசு அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த ஆலோசனையின் போது இணை தலைமை தேர்தல் அதிகாரி பூஜா குல்கர்னி, கூடுதல் செயலாளர் சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications