ஆஸி கப்பலிலிருந்து மீதமுள்ள 56 தமிழர்களும் நாளை தரையிறங்க சம்மதம்

இலங்கையிலிருந்து படகில் வந்த 78 தமிழர்களை மடக்கிப் பிடித்த ஆஸ்திரேலியப் படையினர் தங்கள் நாட்டு சுங்கத்துறை ரோந்துக் கப்பலில் ஏற்றி அவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இவர்கள் பிரன்டன் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு அடைக்கலம் கொடுத்தால்தான் கப்பலை விட்டு இறங்குவோம் என அவர்கள் கூறி வந்ததால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பெரும் இழுபறி நிலவி வந்தது.
இதையடுத்து முறையாக பரிசீலனை செய்து படிப்படியாக அடைக்கலம் வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசு கொள்கை அடிப்படையில் சம்மதம் தெரிவித்தது.
இதையடுத்து 22 தமிழர்கள் நேற்று முன்தினம் கப்பலை விட்டு வெளியேறினர். அவர்களை இந்தோனேசிய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள், தான்சுங் பினாங் தீவுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மீதமுள்ள 56 தமிழர்களும் நாளை கப்பலை விட்டு இறங்க சம்மதித்துள்ளனர். இவர்களில் ஐந்து பேர் பெண்கள், ஐந்து பேர் குழந்தைகள் ஆவர்.
இன்று காலை இந்தோனேசிய அதிகாரிகள் இவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அனைவரும் நாளை கப்பலை விட்டு இறங்க சம்மதம் தெரிவித்தனர்.
மேலும் 41 பேர் வருகை:
இதற்கிடையே, 41 அகதிகளுடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படையினர் வடக்கு ஆஸ்திரேலியா அருகே அஷ்மோர் தீவு அருகே மடக்கி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவை நோக்கி வந்துள்ள 43வது அகதிகள் படகு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு விமானம் மூலம் இந்த படகு வருவது தெரிய வந்தது. இதையடுத்து கடற்படையினர் விரைந்து சென்று தடுத்து நிறுத்தினர்.
அஷ்மோர் தீவுகளிலிருந்து 90 கடல் மைல் தொலைவில் இந்தப் படகு தடுத்து நிறுத்தப்பட்டது.
அந்தப் படகில் 41 பயணிகளும், 2 ஊழியர்களும் இருப்பதாக ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சர் பிரன்டன் ஓ கானர் தெரிவித்துள்ளார்.
இவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்று அங்கு உடல் நலப் பரிசோதனை, பாதுகாப்பு சோதனை, அடையாளச் சோதனை ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அனேகமாக இவர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications