சபரிமலை சீசன்-ஆரியங்காவில் பூஜைகள் துவங்கின

Subscribe to Oneindia Tamil

ஆரியங்காவு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டத்தை தொடர்ந்து ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துபுழை ஐயப்பன் கோயில்களும் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

சபரிமலைக்கு செங்கோட்டை வழியாக செல்லும் வெளி மாநில பக்தர்கள் குற்றால அருவியில் நீராடி விட்டு, அச்சன்கோவில் சென்று அரசனாக வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசித்து விட்டு, செங்கோட்டை வழியாக ஆரியங்காவில் ஐய்யனாராக காட்சி தரும் ஐயப்பனை தரிசித்து, குளத்துப்புழையில் பாலகன் திருவுருவத்தையும் வழிபட்டுச் செல்வது வழக்கம்.

நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டத்தை தொடர்ந்து ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை ஆகிய ஐயப்ப திருத்தலங்களும் திறக்கப்பட்டன. மண்டல பூஜை, சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. 3 தலங்களிலும் அணையா தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன.

இன்று கார்த்திகை மாதப்பிறப்பு என்பதால் குற்றாலம், நெல்லை, ஆரியங்காவு, குமரி கடல், திருச்செந்தூர், அச்சன்கோவில் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர். குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+