ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்: விஎச்பி கோரிக்கை
மதுரை: ஈழத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க ராஜிவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அகில உலகத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் கையாளவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல்ரீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே விஸ்வ இந்து பரிஷத்தின் நிலைப்பாடு.
இந்த வகையில் ராஜிவ்காந்தி- ஜெயவர்த்தனே மேற்கொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் பிரச்சனை என்பது வேறு விஷயம்.
தற்போது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முறையான நிவாரணமும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை சென்று திரும்பிய அமைச்சர் பிரனாப் முகர்ஜி இதை வலியுறுத்தாதது ஏன்?
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஒருகாலப் பூஜைகள் கூட நடைபெறுவதில்லை. கோயில்களில் வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால், பட்டர்கள் உள்ளிட்டோர் போதிய எண்ணிக்கையில் நியமனம் செய்யப்படவில்லை என்பதால் காணிக்கைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதில்லை.
எனவே கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் போல, இந்துக் கோயில்களை இந்து சொசைட்டிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றார்.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications