ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்: விஎச்பி கோரிக்கை
மதுரை: ஈழத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க ராஜிவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் அகில உலகத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் கையாளவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல்ரீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே விஸ்வ இந்து பரிஷத்தின் நிலைப்பாடு.
இந்த வகையில் ராஜிவ்காந்தி- ஜெயவர்த்தனே மேற்கொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகள் பிரச்சனை என்பது வேறு விஷயம்.
தற்போது இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முறையான நிவாரணமும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை சென்று திரும்பிய அமைச்சர் பிரனாப் முகர்ஜி இதை வலியுறுத்தாதது ஏன்?
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஒருகாலப் பூஜைகள் கூட நடைபெறுவதில்லை. கோயில்களில் வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால், பட்டர்கள் உள்ளிட்டோர் போதிய எண்ணிக்கையில் நியமனம் செய்யப்படவில்லை என்பதால் காணிக்கைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதில்லை.
எனவே கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் போல, இந்துக் கோயில்களை இந்து சொசைட்டிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications