நாகர்கோவில் ஆயுர்வேத கல்லூரி-23ம் தேதி கவுன்சிலிங்
நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு ஆயுர்வேத கல்லூரியில் வரும் 23ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
நாகர்கோவில் கோட்டாறில் அரசு ஆயுர்வேத கல்லூரி துவக்கப்பட்டுள்ளது. கல்லூரி துவங்கி 3 ஆண்டுகள் ஆன பிறகும் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இந்நிலையில் 2009-2010 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தலாம் என மத்திய 'ஆயுஷ்' நிறுவனம் உத்தரவு வழங்கியது.
இதையடுத்து சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்திலிருந்து டாக்டர்கள் சாக்கோ, ஜெய்சங்கர் நேற்று கோட்டார் ஆயுர்வேத கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான வசதிகள் இருக்கிறாதா என்பதை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின் டாக்டர் சாக்கோ நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழகத்தின் முதல் அரசு ஆயுர்வேத கல்லூரியான இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பி.ஏ.எம்.எஸ், படிப்பில் 50 பேர் சேர்க்கப்படுகின்றனர்.
ஆய்வு அறிக்கையை சென்னை எம்ஜிஆர் பல்கலை கழகத்தில் சமர்ப்பிப்போம், பல்கலை கழகம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். இங்கு மாணவர்கள் கல்வி பயில்வதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆய்வுக்கூட வசதி, வகுப்பறை வசதி உள்ளன. டாக்டர்கள் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 23ம் தேதி சென்னை அரும்பாக்காம் இந்திய மருத்துவம் மற்று்ம் ஓமியோபதி இயக்குனரகத்தில் மாணவர் சேர்க்கைகான கவுன்சிலிங் நடக்கிறது. ஏற்கனவே அரசு ஆயுர்வேத கல்லூரியில் சீட் கேட்டு விண்ணப்பித்திருந்த 880 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சிலிங் முடிந்ததும் வகுப்புகள் துவங்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications