கோயில்களுக்கு 3 ஆண்டில் ரூ.375 கோடி-அமைச்சர் பெருமிதம்
திருத்தணி: திமுக ஆட்சியில், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 375 கோடி ரூபாய் செலவில், நான்காயிரத்து 250 கோயில்களுக்கு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. 30 ஆண்டில் செய்ய வேண்டியதை மூண்றே ஆண்டில் முடித்துள்ளோம் என்று இந்து அறந்நிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு பேசியதாவது:
திருத்தணி மற்றும் 20க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு, எட்டு கோடியே 23 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகளை இன்று துவக்கி வைத்துள்ளேன்.
தமிழகத்தில் 38 ஆயிரத்து 625 கோயில்கள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவசியம் ஒவ்வொரு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆட்சியில், மூன்று ஆண்டுகளில் 375 கோடி ரூபாய் செலவில், நான்காயிரத்து 250 கோயில்களுக்கு திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கோயில்களுக்கு, ஒன்பது கோடியே 87 லட்சம் ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு 30 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, மூன்று ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்ட ஏற்பாடுகளை செயல்படுத்தி உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications