பவானி ஆற்றில் கழிவு-சாயப்பட்டரை ஆலைகளுக்கு சீல்
ஈரோடு: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பவானி ஆற்றில் சாயக்கழிவு நீரை கலந்த சாயப்பட்டரை ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தன்னர்.
ஈரோடு மாவட்டம் பி.டி அக்ரஹாரம். ஆரியம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாயம் மற்றும் பீளிச்சிங் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் இருந்து தினசரி பல ஆயிரம் லிட்டர் சயாக்கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த சாய கழிவு நீர் நேரடியாக பவானி ஆற்றில் கலக்கின்றன.
சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளை சுத்திகரித்த பின்னரே வெளியேற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ஈரோடு மாவட்டங்களில் இந்த உத்தரவை அமல்படுத்தாமல் பல சாயப்பட்டரை ஆலைகளில் இருந்து கழிவு நீரை பவானி ஆற்றில் கலந்து வருகின்னறர்.
இது குறித்து பொது மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும், புகார்களை அனுப்ப்பி வந்தனர்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் சுத்திகரிக்காமல் சாய கழிவு நீரை வெளியேற்றிய 23 ஆலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 15 சாயப்பட்டரை ஆலைகளுக்கு ஈரோடு மாவட்ட ஆர்.டி.ஓ பெஞ்சமின் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் மோகன்ராம் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.