மர்ம காய்ச்சல்-கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர்
திருச்சி: மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகின்றது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
திருச்சியில் சுகாதரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
நிருபர்களிடம் கூறியதாவது:
கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஒவ்வொரு நோய்களுக்கும் ஒவ்வொரு விதமான மருத்துவத் தொகையை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றது.
பயனாளிகளுக்கு எவ்வித சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை கண்காணிக்க, மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்கள் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் பரவலாக நோய்கள் பரவுவது இயற்கை தான். இதை பத்திரிகைகள் மர்மக் காய்ச்சல் என்று எழுதுகின்றன. இதை கட்டுப்படுத்த சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகின்றது என்றார்.