மனைவியுடன் தொடர்பு-வாலிபரை சுட்டு்க்கொன்ற கணவன்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: மனைவியின் கள்ளக்காதலனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராணிப்பேட்டை அருகே கதார்குப்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (40). அவருடைய மனைவி ரஞ்சிதம் (38). அதே தெருவைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (22), ரஞ்சிதத்துக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏழுமலைக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் இதுபோல இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஏழுமலை, வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியால் மணிகண்டனை சுட்டுவிட்டு, தப்பியோடிவிட்டார்.
குண்டு காயமடைந்த மணிகண்டன் வாலாஜாபேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் மரணமடைந்து விட்டார்.
இது குறித்து ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஏழுமலையை தேடுகின்றனர்.












Click it and Unblock the Notifications