சென்னை கப்பலில் கதிரியக்க பொருள் இல்லை: ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

Cargo Ship
சென்னை: மால்டாவில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பலில் கதிரியக்கப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்தக் கப்பலை நடுக் கடலில் தடுத்து நிறுத்தி சென்னைக்கு வரவழைத்து தீவிர சோதனை நடத்தினர். இதில் கதிரியக்க பொருட்கள் இல்லை என்று முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கார்லான்ட் என்ற கப்பல் விசாகப்பட்டனத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை சென்னை துறைமுகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர், சம்பந்தப்பட்ட கப்பலில், அணு சக்திப் பொருட்கள் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து அந்தக் கப்பலைத் தொடர்பு கொண்ட அதிகாரிகள், உடனடியாக சென்னை துறைமுகத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர்.

மேலும் கடலோரக் காவல் படையினரும் கப்பலை நோக்கி விரைந்தனர். அந்தக் கப்பல் சென்னை துறைமுக எல்லைக்குள் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டது. அவர்கள் கப்பலில் சோதனையத் தொடங்கினர்.

முதல் கட்ட சோதனையில், கதிரியக்கப் பொருட்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து முழுமையாக சோதனை நடைபெருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+