ஐ.நாவுக்காக பணியாற்ற பின்லேடன் மகன் விருப்பம்

Subscribe to Oneindia Tamil

Omar Bin Laden
நியூயார்க்: ஐ.நாவின் அமைதிப் பணிகளில் பங்கேற்று பணியாற்ற விருப்பமாக இருப்பதாக அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் உமர் பின் லேடன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நியூயார்க் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்க முடியாது. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. காரணம், நான் உண்மை பேசுபவன். அதனால் எனக்கு எந்த லாபமும் இல்லாவிடடாலும் கூட உண்மையை மட்டுமே பேச விரும்புபவன்.

அமைதியை நிலைநாட்ட, அமைதிக்காக பாடுபட விரும்புகிறேன். அதற்கு ஒரு பொறுப்பு, பதவி வேண்டும். அந்தப் பணியை ஐ.நாவுடன் இணைந்து செயல்படுத்த விரும்புகிறேன். ஐ.நாவின் அமைதிப் பணிகளில் என்னையும் ஈடுபடுத்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

எனது சிறு வயது வாழ்க்கை மிகவும் சோகமயமானது. நாங்கள் நிறைய குழந்தைகள். ஆனால் எங்களது தந்தை இருக்கும்போது அனைவரும் அமைதியாக இருப்போம்.

எனது தந்தைக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் மீது அதிக அக்கறை இருந்தது. அவர்களுக்காகவே சிந்தித்துக் கொண்டிருப்பார். இதனால் பெரும்பாலும் எங்களுடன் நேரத்தைக் கழிக்க மாட்டார். எப்போதாவது அவரைப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

சவூதியிலிருந்து நாங்கள் சூடானுக்கு இடம் பெயர்ந்தபோது மிகவும் இயல்பான வாழ்க்கை வாழ்ந்தோம். பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தோம். அங்கு வாழ்க்கை கடினமானதாக மாறியது என்றார் உமர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயினில் அரசியல் புகலிடம் கோரியிருந்தார் உமர். இதற்காக ஸ்பெயின் சென்றார். ஆனால் புகலிடம் தர மறுத்த ஸ்பெயின் அரசு அவரை நாட்டுக்குள்ளும் அனுமதிக்காமல் வெளியேற்றியது.

28 வயதாகும் உமர், பின் லேடனின் 19 குழந்தைகளில் ஒருவர் ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+