திருட்டு சாப்ட்வேர்-மைக்ரோசாப்ட் புகார்: எமிரேட்ஸில் ரெய்ட்
துபாய்: தங்களது நிறுவன சாப்ட்வேர்களை திருட்டுத்தனமாக காப்பி செய்து விற்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் திருட்டு சாப்ட்வேர் ஒழிப்புப் பிரிவினர் பெரும் ரெய்டில் ஈடுபட்டு ஏராளமான திருட்டு சாப்ட்வேர்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளனர்.
எமிரேட்ஸில் உள்ள கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திருட்டு சாப்ட்வேர் லோட் செய்யப்பட்டிருந்த கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் மற்றும் திருட்டு சாப்ட்வேர் சிடிக்கள் சிக்கின.
துபாய் மற்றும் ஷார்ஜாவில் இந்த ரெய்டுகள் நடந்தன என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது.
உலகெங்கும் உலவி வரும் தங்களது நிறுவன திருட்டு சாப்ட்வேர்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே எமிரேடிஸ் நடந்த ரெய்டு என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இந்த ரெய்டு குறித்து எமிரேட்ஸ் அரசின் பொருளாதாரத் துறை இயக்குநர் முகம்மது அகமது பின் அப்துல் அஜீஸ் அல் ஷிஹி கூறுகையில், வர்த்தகத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் இந்த திருட்டு சாப்ட்வேர் பெரும் தொல்லையாகும். இதன் விளைவு பொருளாதாரத்தில் எதிரொலிக்கும். எனவே இதை வேட்டையாட வேண்டியது அவசியமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications