Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாவூர்சத்திரத்தில் பூக்கள் விலை மும்மடங்கு உயர்வு

Subscribe to Oneindia Tamil

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரத்தில் ஒரே நாளில் பூக்களின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் பூக்கள் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு பூக்களை வியாபாரிகள் ஏலத்தில் எடுத்து செல்கின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மகசூல் வெகுவாக குறைந்து பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் மல்லிகை பூ கிலோ ரூ.300க்கு விற்பனையானது. நேற்று ஒரே நாளில் 3 மடங்கு விலை உயர்ந்து ரூ.900க்கு விற்கப்படுகிறது.

பிச்சிப்பூ கிலோ ரூ.300லிருந்து ரூ.800க்கும், சம்பங்கி கிலோ ரூ.00லிருந்து ரூ.400க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.150லிருந்து ரூ.600 ஆகவும் 'கிடுகிடு'வென உயர்ந்துவிட்டது.

அதேபோல், செவ்வந்தி கிலோ 50 ரூபாயிலிருந்து 150ஆகவும், ரூ.10க்கு விற்பனையான கேந்திப் பூ ரூ.70ஆகவும் உயர்ந்துள்ளது. வழக்கமாக 200 கிராம் கொண்ட அரளிப்பூ பாக்கெட் ரூ.10 என விற்கப்படும். இது தற்போது ரூ.70ஆக உயர்ந்துவிட்டது.

பூக்களின் திடீர் விலை உயர்வால் சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+