பி.எச்டி. மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு: 2 துணை வேந்தர்கள் மாறுபட்ட கருத்து

ஆனால், பி.எச்டி ஆராச்சி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் ஹுமானிட்டிஸ் போன்றவற்றில் முழு நேர, பகுதி நேர பிஎச்டி ஆய்வு படிப்புகளில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சில பொறியியல் கல்லூரிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையங்களில் பிஎச்டி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இவற்றுக்கு ஜனவரி, ஜூலை மாதங்கள் என இரு பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்டோர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்து பட்டம் பெறுகின்றனர்.
இதற்கிடையே பல்கலைக்கழக மானியக் குழு சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக்கழகங்கள் ஆய்வு படிப்பு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இந் நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. படிப்பு மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை முழுமையாகப் பின்பற்றப்படும் என்று அப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களும் பி.எச்டியில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில்,
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள்தான் இருக்கின்றன.
ஆய்வு படிப்புக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் நுழைவுத் தேர்வு மூலம் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.
-
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்.. தமிழ்நாடு முழுவதும் 9.09 லட்சம் பேர் எழுதுகின்றனர்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு












Click it and Unblock the Notifications