சுகோயில் போர் விமானத்தில் பறந்தார் பிரதீபா!-உலக சாதனை!!

இதற்காக வழக்கமாக அணியும் சேலைக்குப் பதில், அவர் ஜி-சூட் அணிந்து பயணித்தார்.
இன்று காலை காலை புனே வந்த அவருக்கு லோஹேகாவ்ன் விமானப் படைத் தளத்தில் வீரர்கள் அணி வகுப்பு மரியாதை அளித்து வரவேற்றனர்.
பின்னர் சுகோய் பயணத்தை அவர் மேற்கொண்டார்.
சுகோய் போர் விமானத்தை விமானி விங் கமாண்டர் எஸ்.சாஜன் இயக்க, அவருக்கு பின் பகுதியில் உள்ள துணை விமானியின் காக்பிட்டில் அமர்ந்து பயணித்தார் பிரதீபா.
வானில் சுமார் 40 நிமிடங்கள் விமானத்தில் அவர் வட்டமிட்டார். மணிக்கு 2,000 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியது சுகோய். ஆனால், ஜனாதிபதி பயணித்ததால் 900 கி.மீ. வேகத்துக்கும் குறைவான வேகத்திலேயே சுகோய் இயக்கப்பட்டது. அதிகபட்சமாக 10,000 அடி உயரத்தில் மட்டுமே அந்த விமானம் இயக்கப்பட்டது.
இதைப் போல இரு மடங்கு உயரத்தில் அதனால் பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குடியரசுத் தலைவருக்கான ஜி-சூட் உடையைக் கண்டுபிடிப்பதற்குள் திணறிப் போய் விட்டதாம் விமானப்படை. காரணம், வழக்கமான ஜி-சூட் உடைகளை அணிபவர்கள் நல்ல உயரமும், திடகாத்திரமுமான உருவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் பிரதீபா பாட்டீலுக்குப் பொருத்தமான ஜி-சூட் உடை கிடைக்காமல் தவித்துப் போய் விட்டனராம்.
பின்னர் ஒரு வழியாக ஜி-சூட் உடையை ரெடி செய்து வைத்து விட்டனர்.
மேலும், விமானப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழு பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து விமான பயணம் குறித்து விளக்கினர்.
சுகோய் விமானத்தில் பறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். 2006ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி அவர் சுகோய் விமானத்தில் பறந்தார்.
கின்னஸ் புத்தகத்தில் பெயர்..
இதையடுத்து தற்போது சுகோயில் பறந்த 2வது குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பிரதீபா பாட்டீல் பெற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், 74 வயதான பிரதீபா பாட்டீல் போர் விமானத்தில் பறந்த முதல் பெண் ஜனாதிபதி ஆவார். இதன்மூலம் அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளார்.
போர் விமானத்தில் பறந்து முடித்து மிக மகிழ்ச்சியாக தரையிறங்கிய பிரதீபா நிருபர்களிடம் பேசுகையில், நமது முப்படைகளின் கையில் நாடு மிக பாதுகாப்பாக உள்ளது. பெண்கள் முன்பெல்லாம் பாதுகாப்புப் படைகளில் இடம் பெறுவதில்லை. இப்போது நிலைமை மாறிவிட்டது.
இந்திய விமானப் படையின் போர் விமானங்களை இயக்குவதிலும் பெண்களுக்கு வாய்ப்புக்கள் தருவது குறித்து சரியான முடிவெடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications