மும்பை தாக்குதல் தினம்: இந்தியாவில் இல்லாத பிரதமர்-மக்கள் ஏமாற்றம்

இன்று மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் முதலாண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. காலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மக்கள் மும்பை சம்பவத்தில் உயிர் நீத்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தனர்.
ஆனால் நாட்டின் பிரதமரான மன்மோகன் சிங் இன்றைய தினம் இந்தியாவில் இல்லாதது மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர், அமெரிக்க அதிபருடன் அளவளாவி வருவதும், விருந்துண்டதையும் மக்கள் ரசிக்கவில்லை. அங்கிருந்து மும்பை நினைவு நாளையொட்டி அவர் மக்களுக்கு ஆறுதல் கூறி அறிக்கை விட்டதையும் மக்கள் ரசிக்கவில்லை.
அதை விடக் கொடுமையாக நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரலில் தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக, மக்களுக்கு ஆதரவாக இன்று எம்.பிக்கள் குரல் கொடுக்காமல் போனது மக்களை மேலும் வெறுப்படைய வைத்துள்ளது.
நாட்டின் தலைவரான பிரதமர் இன்று இந்தியாவில் இருந்திருக்க வேண்டும். மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். மும்பை மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆதரவாக பேசியிருக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது, எடுத்து வருகிறது என்பதை விளக்கியிருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தனர்.
பிரதமர்தான் இல்லை, நமது நாட்டு நாடாளுமன்றமாவது ஒருமித்த குரலில் மும்பை நினைவு தினத்தை அனுசரித்ததா என்றால் அதுவும் இல்லை. இன்று நாடாளுமன்றத்தில் வழக்கம் போல எதிர்க்கட்சிகள் ஒன்று பேச, அரசு ஒன்று பேச என வழக்கம் போல அமளிதான்.
இன்றும் நாடாளுமன்றம் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது நாட்டு மக்களை கேவப்படுத்தியது போலாகி விட்டது.
அதேபோல குடியரசுத் தலைவரும் கூட இன்றைய தினத்தை பெரிய அளவில் கவலைப்பட்டதாக தெரியவில்லை. நேற்று சுகோய் விமானத்தில் அவர் பறந்து சாதனை படைத்தார். இன்று நாட்டு மக்களுக்கு ஆதரவாக அவர் எதுவும் பேசவில்லை.
தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக மக்களிடம் உள்ள உணர்வில் ஒரு பங்கு கூட தலைவர்களிடம் இல்லை என்பதாகவே இவையெல்லாம் உணர்த்துகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications