24/11க்குப் பின் பெருமளவில் மாறிவிட்ட இந்திய பாதுகாப்பு
மும்பை: நவம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பெருமளவு மாறியுள்ளது இந்தியா.
மும்பையில் கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த பெரும் தீவிரவாதத் தாக்குதலின் ஓராண்டு நிறைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அன்று இருந்ததை விட இப்போது இந்தியா பாதுகாப்பு காட்சிகள் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனரான சிவானந்தன் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்த ஒரு பார்வை...
- மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் மும்பை, கொல்கததா, சென்னை, ஹைதராபாத் நகரஙகளில் தலா 240 கமாண்டோக்களைக் கொண்ட என்.எஸ்.ஜி பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் முதல் ஹெல்மட் வரை அனைத்தும் நவீனமாகியுள்ளது. குண்டு துளைக்காத உடையிலும் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
- என்.எஸ்.ஜி படையினரை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும ஏற்றிச் செல்வதற்காக எட்டு தனியார் விமான நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
- இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்திக் கொள்ள என்.எஸ்.ஜி. ஒப்புதல் பெற்றுள்ளது. மேலும் என்.எஸ்.ஜி. படையினருக்கு பயிற்சி அளிக்க விமானப்படையும் முன்வந்துள்ளது.
- தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை புலனாய்வு செய்ய தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைக்கப்பட்ட்டுள்ளது. இந்த விசாரணைக்காக எந்த மாநில அரசிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்ற உரிமையும் என்.ஐ.ஏவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
- கடலோரப் பாதுகாப்பு கடல் அளவிலான மாற்றத்தைக் கண்டுள்ளது. ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கப்பல் மூலமாக மட்டுமல்லாமல் வான் ரீதியான பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஒன்பது கடலோர மையங்களில் 46 கடலோர கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
- ஐந்து மினி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க கடற்படை முயன்று வருகிறது.
- கடலோரப் பாதுகாப்புப் படை 20 அதி வேக ரோந்துப் படகுளையும், 41 இடைமறிப்பு படகுகளையும், 12 கடலோரக் கண்காணிப்பு விமானங்களையும், 7 கடலோர ரோந்து வாகனங்களையும் வாங்க தீர்மானித்துள்ளது.
- மத்திய உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறையைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
- இதேபோல மாநிலங்களிலும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- அனைத்து புலனாய்வு, உளவு அமைப்புகளும் தினசரி ஆலோசனைக் கூடடங்களை நடத்தி தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
- காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு அதிக அளவில் செலவிடப்படுகிறது.
- மும்பையில் 256 கமாண்டோக்களைக் கொண்ட போர்ஸ் ஒன்ற சிறப்பு் படைப் பிரிவு உருவாக்கப்பட்டுளளது.
- மும்பை போலீஸாருக்காக 2 புல்லட் புரூப் படகுகள் கண்காணிப்புப் பணிக்காக வாங்கப்பட்டுள்ளன.
- மும்பை போலீஸாரின் எண்ணிக்கை கூடுதலாக 1000 பேரைச் சேர்த்து 43000 ஆக அதிகரித்துள்ளது.
- தெற்கு மும்பையின் முக்கியப் பகுதிகளைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் 1000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- நகர் முழுக்க 500 ரகசியக் காமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- 1500 அதிக சக்தி வாய்ந்த வாகனங்கள், 20 அதி நவீன வாகனங்கள், படகுகளையும் மும்பை போலீஸார் தற்போது பெற்றுள்ளனர்.
- 39 நடமாடும் தாக்குதல் வாகனங்களும் தற்போது மும்பையை வலம் வந்து கொண்டுள்ளன. மேலும், ஐந்து இடங்களில் கமாண்டோப் படையினரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
- மும்பை போலீஸாருக்கு உதவுவதற்காக கொய்னா மற்றும் காவேரி என பெயரிடப்பட்ட இரு அதி வேக படகுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications